Latest Posts :
Recent Posts

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள் -- அழகு குறிப்புகள்.,



* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும். 

*  கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும். 

*  நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். 

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. 

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும். 

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும். 

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

முடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம்

முடி அடர்த்தியாக வளர.......... பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது. மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்.......... 1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். 2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும். 3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். 5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். 7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும். 8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும். 9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்...!

ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது. எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் உண்மைதான். காவல்துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த வாதம்தான். எனினும், இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 

நடைமுறையில் காவல்நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே ஒரு காவல்துறையின் அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படுகிறது. 

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர். செல்வாக்கு மிக்கவர்களால் அனுப்பப்படும் புகார்களை புறக்கணித்தால், காவல்துறையினருக்கு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறில்லாத நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ஆதாயம் இல்லாத நிலையில் அந்தப் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை. 

இந்தச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம். 

 இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது. 
  
இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது. 

 ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது. 

 இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.  இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும். 

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். 

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது. 

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும். 

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும். 

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது. இந்த கைது குறித்து அடுத்து பார்ப்போம்...!

தெரிந்து கொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)

தெரிந்து கொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)

1. "தகவல் அறியும் உரிமைச் சட்டம் " என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன?, தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவை இடம்பெற வேண்டும்.
3. மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.
4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு அதன் ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டையும் பாதுகாத்துக்கொள்ளவும்.
5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்து கொள்ளலாம்.
6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.
7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்?
எடுத்துக்காட்டாக,
1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும்?
4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான‘ பசுமை வீடுகள் திட்டம்’, இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம்
(முந்தைய ஆட்சியில்‘ நமக்கு நாமே திட்டம்‘), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள்
(தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனைப் பெற யாரை அணுகுவது? என்ன என்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா?
8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது?
10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?
11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?
12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்போது ஆரம்பமாகும்? இப்பணிகள் முழுவதும் எப்போது நிறைவு பெரும்?
13. நமதூரில் புதிய தீ அணைப்பு நிலையம் அமைய யாரை அணுக வேண்டும்? அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல பொதுமக்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?
14. அரசின் சார்பாக பாதாள சாக்கடைத் திட்டம் நமதூரில் ஏற்படுத்த அரசின் கவனத்துக்கு எவ்வாறு எடுத்துச்செல்வது? அதற்குரிய வழிமுறைகள் என்ன?
15. நமதூரில் இடிந்துவிழக்கூடிய நிலையில் உள்ள பள்ளிக் கட்டங்களைப் புதுப்பிக்க யாருடைய கவனத்துக்கு எடுத்துச்செல்வது? அதற்குரிய வழிமுறைகள் என்ன?
இப்படி நீங்களும் இதே போல் எண்ணற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.
மாநில அரசு தகவல்கள் பெற :
திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )
மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 ,
அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )
தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580
Email :
Website :
மத்திய அரசு தகவல்கள் பெற :
Shri Satyananda Mishra
Chief Information Commissioner Room No.306,
II FloorAugust Kranti BhavanBhikaji
Cama PlaceNew Delhi - 110 066.
Phone:- 011 - 26717355
E-mail :- s.mishra@nic.in
Website :
 குறிப்பு : மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.
சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.

பாம்புகள் ஜாக்கிரதை……

பாம்பு எப்போது கடிக்கும்? பாம்பு தீண்டிய பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பாம்பு வகைகள் பாம்புகள் இருப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பாம்புகள் எங்கு இருக்கும்? பாம்புகள் ஜாக்கிரதை...... வி­ஷத்தின் வேறுபாடுகள் வி­ஷமற்ற பாம்பு வகைகள் விவசாயிகள் கவனத்திற்கு விஷ­முள்ள பாம்பு  



snake‘பாம்பென்றால் படையும் நடுங்கும் ‘.ஆனால் இவ்வுலகில் அதை அன்பாகவும் அதுவும் ஒர் உயிரினம் என்று நினைப்பவர்கள் நிறையபேர் இருக்கின்றனர்.  அதில் ஒருவர் தான் திரு.லு.ரத்தீஸ்
அவர்கள் (பாம்புகள் பாதுகாப்பு அமைப்பு) பாம்பு பற்றிய விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்துவதோடுஅவற்றின் அவசிம் குறித்தும் நமக்கு கூறுகிறார்.

நாங்கள் முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறோம். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள்,தீயணைப்புத்துறை, வனத்துறை, மலைவாழ் மக்கள், கிரகப்பிரவேசம், திருமண நிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு இடங்களுக்கு பவர்பாய்ண்ட் பிரஸ் ஸ்டே­ன், மற்றும் பொது இடங்களில் பாம்புகளைக் காப்பாற்றும் பொழுது அங்கிருக்கும் மக்களுக்கு என்ன வகையாக பாம்பு என்று விளக்குவதோடு அது விஷ­ம் (Veom) உள்ள / அல்லாத பாம்பா , எந்த வகையைச் சார்ந்தது அதன் குணாதிசயங்கள் போன்ற தகவல்களை வழங்குவோம்.  மேலும் பாம்புகளைக்
காப்பாற்றுவதற்கு (Rescue) ஒரு குழுவும் ஏற்படுத்தியுள்ளார்.  அக்குழுவில் சுமார் 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுவாக எல்லா இடங்களுக்கும் பாம்புகளைக் காப்பாற்ற நான் செல்ல வேண்டியதில்லை.எங்கள் குழுவில் இருக்கும் நபர்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இடங்களுக்குச் சென்று காப்பாற்றுவார்கள்.  அப்படிச் செல்லும் நேரத்தில் புதிதாகப் பயிற்சிஎடுக்க வரும் நபர்களை அவர்களுடன் செல்ல அறிவுருத்துவோம்.  பல பயிற்சிக் களங்களை கண்டவுடன் அவர்களும் நன்கு தேர்ச்சி பெற்றுவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதனால் பாம்புகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பாம்புகள் எங்கு இருக்கும்?

பாம்புகள் சாலையோரங்களில் சுவரை ஒட்டியே செல்லும். மற்றும் செடி, புதர் மண்டிக் கிடக்கும் இடங்களிலேயே செல்லும்.   அதன் உணவான எலிகள் அங்கே இருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் பாம்புகளின் மறைவிடங்கள் இருக்கும் தொழிற் கூடம், என்றால் குப்பைகள் மற்றும் பழைய சாமான் இருக்கும் இடங்கள், வீட்டிற்குள் புகம் பொழுது பீரோ என்று மறைவாக இருக்கும் இடத்திலேயே சென்று விடும்.  இதைக் கண்டறிவதே முதல் களப் பயிற்சி என்று கூறுகிறார்.  இதை மகுடி ஊதிப் பிடிப்பது என்பதெல்லாம் தவறான முறையைக் கையாள்வதாகும் என்றார்.

சேவை செய்து வருகிறோம்

கோவை மாவட்டத்தில் காவல்துறை, வனத்துறை போன்ற இடங்களுக்குத் தொடர்பு கொண்டாலும் பாம்புகள் பற்றிய புகார்கள் வந்தால் தங்களின் தொலைபேசி எண்களைக் கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.  நாங்கள் 24 மணி நேரமும் இந்தச் சேவையைச் செய்து வருவதே இதற்குக் காரணம் என்று கூறுகிறார்.  அதே போன்று இதைப் பிடிப்பதற்கு மக்களிடம் எந்தப் பண உபகாரமும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை, எங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிறப்புவதற்காக மட்டும் ரூபாய் 100/-கேட்டுப் பெற்று வருகிறோம்.  இதற்கு அவர் சொன்ன காரணம் தாங்கள் பிடித்த பாம்பைப் பத்திரமாக எடுத்துச் சென்று அருகாமையிலுள்ள, (ஆனைகட்டி மலை) காடுகளில் மாலை 5 மணிக்கு மேல் விட்டுவிடுவோம் என்றனர்.  இதற்குச் சில வழிகளைப் பின்பற்றுகின்றனர்.  பாம்பு பிடிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் பொது மக்களிடம் கடிதம் ஒன்றை எழுதி அதில் எந்த வகையான பாம்பு, அவர்களிடம் பெற்ற தொகை, நேரம், இடம் என்ற அனைத்துத் தகவல்களையும் அதில் சேகரித்து  வனத்துறைக்கு ஒரு நகலை வழங்கி அவர்களிடம் அனுமதி பெற்றே வனத்திற்குள் பாம்புகளை விடுவோம் என்றார்.  மேலும் மக்கள் தாங்கள் பார்க்கும் பொது இடங்களில் பாம்புகள் அடிபட்டு இருந்தாலோ அல்லது பொது மக்களுக்கு இடையூறாக இருந்தாலோ தங்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்றும் கூறினார்.

பாம்பு எப்போது கடிக்கும்?

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மனிதர்களைக் கண்டால்  துரத்தி வரும்; சில நேரங்களில் கடித்து விடும் .  ஆனால் பாம்பு எப்போதும் மனிதர்களைக் கண்டால் விறைந்து நகர்ந்து விடும்.   எந்தச் சூழ்நிலையிலும் பாம்பு விரட்டி வந்து யாரையும் கடித்ததில்லை என்று அழுத்தமாகக் கூறுகிறார்.இரை எடுத்துக் கொண்ட பாம்பே நகர்ந்து செல்ல இயலாமல் இருக்கும்.  அதுபோன்ற சூழ்நிலைகளில்தான் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்.

பாம்புகள் இருப்பதினால் கிடைக்கும் நன்மைகள்

விவசாயத்திற்குப் பெரும் அளவு நன்மை கிடைப்பதில் பாம்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  பொதுவாக
எலிகளை வேட்டையாடுவதில் ஆந்தை, கழுகு மற்றும் பூனைகள் இருக்கும் ஆனால் அவை அனைத்து விலங்குகளுக்கும் இல்லாத சிறப்பு பாம்புக்கு உண்டு.  அது எப்படி?  ஒரு ஆந்தை வருடத்திற்கு சுமார்  3000 எலிகளை வேட்டையாடும், மற்ற விலங்குகளும் சரிவிகிதத்தில் வேட்டையாடுபவையே.ஆனால் பாம்புகள் மட்டுமே பொந்துக்குள் சென்று எலிகளை வேட்டையாடுவதும் எலிகளின்
எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதும் மிகவும் குறிப்பிடதக்கது.  எலிகளினால் அப்படிஎன்ன பிரச்சனை விவசாயிகளை வந்தடைகிறது என்றால், எலிகள் தனது பாதுகாப்பிற்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் விவசாய நிலத்தில் வங்குகள் பதித்து இருக்கும்.  இதனால் பயிர்களுக்குத்
தேவையான நீர் கிடைக்காமல் நீர் மேலாண்மை பாதிக்கப்பட்டு நீர் பற்றாக்குறையும் ஏற்படும் மேலும் அது தனது உணவிற்காகப் பயிர்களின் வேர்களை உண்டு உயிர் வாழ்வதுடன் பயிர்களையும்
சேதப்படுத்தி உணவு உற்பத்தியையும் கெடுக்கும் அளவுக்கு வல்லமை படைத்தவைகள் எலிகள் என்று சொன்னால் அது மிகையல்ல.  சில வகைப் பாம்புகள் பூச்சிகளை மட்டுமே உண்ணும்,சில வகை பாம்புகள் தவளை, மீன் போன்றவற்றையே உண்ணும் பாம்புகளிடம் இருந்து எடுக்கப் படும் வி­ம் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுவதும் உண்டு ( புற்றுநோய், வலிப்பு,இதயநோய் போன்றவற்றிற்கு).  பாம்புக் கடிக்கு மருந்தானப் பாம்புகளிடமிருந்து எடுக்கப்படும் வி­த்தையே
பயன்படுத்துகின்றனர் (Anti venom)

பாம்பு வகைகள்

இந்த உலகில் சுமார் 2700 வகையான பாம்புகள் இருக்கின்றன.  நமது இந்தியாவில் 272முதல் 275 வகையான பாம்புகளும் இருக்கின்றன.  அதில் 7 வகையான பாம்புகளுக்கு மட்டுமே மனிதர்களைக் கொல்லக்கூடிய விஷ­த்தன்மை உள்ளது.  அதிலும் 4 வகையான பாம்புகள் மட்டுமே நிலப்பரப்பில் வாழ்பவை

1. நாகப்பாம்பு
2.கண்ணாடிவிரியன்
3.சுருட்டை விரியன்
4. கட்டு விரியன்

மீதமுள்ள 3 வகையான பாம்புகள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருப்பவை.

1. ராஜ நாகம்
2.குளிப் பாம்பு
3. பவளப்பாம்பு

இந்த 7 வகை பாம்புகளைத் தவிர நடு நிலை வி­முள்ள பாம்புகளும் உள்ளன. (Mild venom)
1.பச்சைப் பாம்பு
2.பூனைப் பாம்பு
3.பறக்கும் பாம்பு

இந்த வகையான பாம்புகள் சிறு உயிரினங்களை மயக்கமடையச் செய்து, தனக்கான உணவைச் சேகரிக்கக் கூடியவை.  இது போன்ற பாம்புகள் மனிதர்களைத் தீண்டினால் தொற்று நோய்
ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம் என்றார்.

வி­ஷமற்ற பாம்பு வகைகள்

மேலே கூறப்பட்ட பாம்பு வகைகளைத் தவிற மற்ற அனைத்தும் வி­மற்றவையே. அதில் சில

1. சாரைப்பாம்பு
2.தண்ணீர்ப் பாம்பு
3.கொம்பேரி மூக்கன்
4. மலைப்பாம்பு
5. குட்டைப் பாம்பு – சுருட்டை விரியன் பாம்பும் குட்டையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஷ­முள்ள பாம்பு

நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய பாம்புகள் (neuro toxin venom)

1.நாகப் பாம்பு
2. கட்டுவிரியன்
3. ராஜ நாகம்
4. பவழப் பாம்பு

அதே போல் நாகத்தில் இரண்டு வகைகள் உள்ளன.  தென் இந்தியா மற்றும் வட இந்தியா நாகம்.(Mono cled cobra) (”U” shaped spectacle cobra)நீர் வீழ்ச்சி நாகம்  (Falls cobra)

நடுநிலை வி­ஷமுள்ளது

கருநாகம்  – பாம்பு முழுவதும் கருப்பாக இருக்கும்
மஞ்சள் நாகம்   – பாம்பு முழுவதும் மஞ்சளாக இருக்கும்.

ராஜ நாகம்நாகங்களில் மிக நீளமாக வளரக்கூடியது.உலகிலேயே அதிக வி­ம் உள்ள பாம்பு இதன் உணவு பாம்புகள் மட்டுமே சாரைப் பாம்புகளுக்குப் பிடித்த உணவு எலிகள், ஆகவே எலிகளைப் பிடிக்கச் சாரைப் பாம்புகள் வயல் வெளிகளில் சுற்றித் திரியும்

வி­ஷத்தின் வேறுபாடுகள் (நாகம் மற்றும் ராஜநாகம்)

ராஜநாகப் பாம்பின் வி­ வீரியத்தை விட நாகத்தின் வி­ வீரியம் அதிகம்.  ஆனால் அதன் அளவுகளிலே வேறுபாடு உள்ளது  அதாவது ராஜநாகத்தின் வி­ வீரியம் குறைவானாலும் அதன் அளவு (நச்சு நீர்) அதிகம்.  அதுவே நாகத்தில் வி­ வீரியம் அதிகமானலும் அதன்
அளவு (நசசு நீர்)   ராஜநாகத்தை விடக் குறைவு.

பவளப் பாம்பு – வி­த்தின் வீரியம் அதிகம்
சுமார் இரண்டு அடி வரை இருக்கும்.
நாகத்தை விடப் 16 மடங்கு வி­த்தின் வீரியம் அதிகம்

இரத்த நாளங்களைத் தாக்கும் பாம்புகள்

1.சுருட்டை விரியன்
2.கண்ணாடி விரியன்

பாம்பு  தீண்டிய பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

பாம்பு கடித்த இடத்தில் வலி மற்றும் கடுகடுப்புத் தன்மை இருக்கும், அதிலும் நரம்பு மண்டலங்களைத் தாக்கும் பாம்புகளை விட, ரத்த நாளங்களைத் தாக்கும் பாம்புகளே அதிக வலி ஏற்படுத்தும்
என்கிறார்.  முதலில் கடி பட்ட இடத்தைக் கட்டுவதோ அல்லது கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைப் பயன் படுத்துவதோ, வாய் வைத்து உறிஞ்சுதல் போன்ற எந்தச் செயல்களும் செய்தல்
கூடாது.  பாம்பு தீண்டியவர்களைப் பதட்டமடையச் செய்தல் கூடாது.  பாம்பு தீண்டிய இடத்தினை,கை கால் உடம்பு போன்ற எந்த உறுப்பாக இருந்தாலும் அசைக்காமல் அருகில் உள்ள
மருத்துவ மனைக்குக் கூட்டிச் செல்லுதல் அவசியம்.  அதிலும் திரு.ரத்தீஷ் அவர்கள் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவ மனையே சிறந்தது.  அங்கு ஒவ்வொரு நாளும்
சுமார் 2 நபர்களையாவது பாம்பு தீண்டியவரைக் காப்பாற்றி வருகிறார்கள்.  ஆகவே அவர்களக்கு மிகுந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.  என்றும் விளக்கினார். (இதில் முக்கிய குறிப்பாக பாம்பை தீண்டிய நபரை முதலில் அருகாமையில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்து செல்லுதல் அவசியம்)  மேலும் ஒரு தகவலைத் தந்தவராக ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தில்
அமைந்துள்ள தன்வந்திரி மருத்துவமனையைக் குறிப்பிட்டார். அங்கு டாக்டர் திரு.கணபதி டாக்ளாகாலஜீ (நச்சு முறிவு) ஸ்பெ­லிஸ்ட்.  இது போன்ற பாம்புக் கடியைக் குணப்படுததுவதில்
சிறப்பு வாய்ந்தவர் என்றம் தெரிவித்தார்.

  • பாம்புக்கு நினைவாற்றல் குறைவு சுமார் 12டி நிமிடம் மட்டுமே இதற்கு நினைவுகள் இருக்கும்.

    (பாம்புகள் பழி வாங்கும் என்பது மூட நம்பிக்கையே).

  • பாம்பு பால் குடிக்காது,பாம்புக்கு ஜுரண சக்தி மிகவும் குறைவு

  • பாம்பு கடி பட்ட இடத்தில் கிருமி நாசினி (antibiotic),  மஞ்சள், சோம்பு, டெட்டால் கொண்டுசுத்தம் செய்ய வேண்டும்.

  • பார்ப்பதற்குக் குட்டை பாம்பும் கட்டு விரியனும் ஒன்று போல் இருக்கும்.

  • பாம்புக்குக் காது கிடையாது.

  • உலகிலேயே கூடு கட்டி வாழும் பாம்பு ராஜநாகம் மட்டுமே (முட்டையிடும் காலம் மட்டுமே -

    மூங்கில் காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிப் பகுதிகள்)

  • சாரை மற்றும் நாகப் பாம்புகள் சுமார் 14 வருடம் முதல் 16 வருடம் வரை உயிர் வாழும்தற்போதைய சூழ்நிலையில் சுமார் 7 வருடம் என்பதே சவாலாக இருக்கிறது என்று கூறினார் -சுற்றுப்புறச் சூழல் காரணமாக இந்த நிலை உள்ளது.

  • கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், மண்ணுளி, பச்சைப்பாம்பு போன்ற வகைகள் குட்டி

    போடுபவை

  • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் அதிகம் ஆக்கிரமிப்பு நடப்பதனாலே சுற்று சூழல் பாதிக்கப்படுவதாகவும் நகரங்களுக்குள் பாம்புகள் நுழைவதும் நடக்கிறது என்று வேதனையுடன்தெரிவித்தார்.

  • ‘அனகோண்டா’ வகை பாம்புகள் நஞ்சற்ற வகைகள் (non venoms) ஆகும்.

விவசாயிகள் கவனத்திற்கு

விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோழிகளை வளர்க்கலாம்.  இவைகளால் பாம்புகளைப் பிடிக்காவிட்டாலும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும்.  மேலும் இரவு  நேரங்களில்
கையில் மின் விளக்கு மற்றும் தடி மூலம் நிலத்தைத் தட்டி ஓசை எழுப்புதல் (அதிர்வலைகள் எழுப்புதல்) காலணி பயன்படுத்துதல் (பி.வி.சி. காலணிகள் – கோவை மாவட்டம் – காவலர் சீறுடைகள் விற்பனைக் கடைகள் – காட்டூர் வீதி (பாப்பநாயக்கன்பாளையம்) – காக்ஸ் வீதி (கோவை) போன்ற முறைகளால் நாம் தற்காத்துக் கொள்ள முடியும் மேலும் பாம்பு என்பது. மனிதனின் உணவுச் சங்கலியில் அதற்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு ஆகவே, பாம்புக்குப் பாதுகாப்பு அளித்திட அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  பயிற்சி மற்றும் பாம்புகள் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்திடத் தொடர்பு கொள்ளவும்

K.ரத்தீஷ்
(பாம்புகள் பாதுகாப்பு அமைப்பு,)
97873 32814
97502 09000

பாம்புக்குப் பால் ஊற்றுவதற்கும் முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன?

உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட வி­யமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.  பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்,ஆதிகாலத்தில் மனிதனுக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தவை பாம்புகள்.  காரணம் அடர்ந்த காடுகள், மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு.  மனிதனைவிடப் பாம்புகள் அதிகமாகக் காணப்பட்டன.  ஒரு உயிரினத்தைக் கொல்லும் உரிமை தமிழ் மக்களுக்கு இல்லை.  அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.  ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.  பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசமானது.பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒரு வாசனைத் திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும்அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.  பெண் பாம்பு  வாசனையைக் கட்டுப்பத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனையைத் தடுக்கிறது.  ஆகவே,அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.  இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.  அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

வைரஸ் தாக்கிய‘ பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!



usbதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.  இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.  இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.  வெற்றிடமாக இருக்கும்.  ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.  காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது.  பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை எனில்format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம்.  ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.  உங்கள் கணினியிலேயே சுலபமாக  செய்து விடலாம்.  கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1. முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2Start==Run ==CMD ==Enter கொடுக்கவும்

3. இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள்.  My computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4. உதாரணமாக E டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்துக் கொள்வோம் அதற்கு நீங்கள் சி என கொடுத்து Enter அழுத்தவும்.

5. attrib -h -s -r /s /d * . * என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Spaceசரியாக கொடுக்கவும்.

நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள்.  இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

சட்டம் என்ன சொல்கிறது - சட்டம் குறித்த கேள்வி பதில்கள்



சட்டம் குறித்த கேள்வி – பதில்கள்

lawகேள்வி 1.

நான் பல வருடங்களுக்கு முன்பு கோவை அவினாசி ரோட்டில் 10 சென்ட் இடம் வாங்கினேன்.  கடந்த மாதம் அந்த இடத்த விற்க முயற்ன போது, அந்த இடம் 2005 ஆம் ஆண்டே வேறொருவருக்கு விற்கப்பட்டுள்ளது தெரிய வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பார்த்த போது, எனது பெயரில் யாரோ கையயழத்து, கைரேகை போட்டு ஆள் மாற்றம் செய்து விற்றுள்ளனர்.  எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  தயவு செய்து எனக்கு உதவுங்கள்.

R.பாக்கியராஜ், பல்லடம்

பதில் – 1.

ஒவ்வொரு பத்திரம் பதிவு செய்யும் போது விற்பவரை எனக்குத் தெரியும் என இரு நபர்கள் சாட்சிக் கையயழுத்திட வேண்டும். விற்பவர் பத்திரத்திலும், பதிவாளர் அலுவலகத்திலுள்ள பதிவேட்டிலும் கைரேகை வைக்க வேண்டும். உங்கள் பிரச்சினையில், சாட்சிக் கையயழுத்திட்டவர்களுக்கும் இடத்தை விற்றவருக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும். நீங்கள் சாட்சிக் கையழுத்திட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிவில் நீதி மன்றத்திலும் நடவடிக்கை எடுக்கலாம்.

கேள்வி -2.

எனக்குக் காசோலை கொடுத்தவர்,தற்போது அவருடைய கையயழத்து இல்லையயனவும், இந்த காசோலை திருடு போய் விட்டதாகவும் கூறுகிறார்.  அவர் என் முன்னிலையில் கையயழுத்துப் போட்டு அந்தக் காசோலையை நேரடியாக என்னிடம் கொடுத்தார்.  இப்போது கையயழுத்தே அவருடையது இல்லை என்கிறார்.  எனக்கு என்ன செய்வதென புரியவில்லை. தங்களுடைய உதவியை நாடுகிறேன்.  இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?

S.ரத்தினசாமி, திருப்பூர்.

பதில் – 2.

அவர் உங்களைப் பயமுறுத்த அப்படி கூறலாம்.  அவருடைய கையழுத்துதான் என்பது உங்களுக்கு நேரிடையாகத் தெரிகிறது.காசோலையை அவரிடமிருந்தே நீங்களே பெற்றிருப்பதாலும் அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.  நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள்.  அங்கும் அவர் அவருடைய கையயாப்பம் இல்லையயன மறுத்தால் அவருடைய மற்ற கையயாப்பங்களுடன் இணைத்துப் பார்த்து நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வரலாம்.  இல்லையயனில், கையயழுத்து நிபுணருக்கு அனுப்பிக் கருத்துக் கேட்கலாம்.

கேள்வி – 3.

தான செட்டில்மெண்ட்டுக்கும் உயிலுக்கும் என்ன வித்தியாசம்? தயவு செய்து கூறவும்.

S.குமார், கோவை.

பதில் – 3.

ஒருவர் தன்னுடைய சொத்தை தான செட்டில்மெண்ட் மூலம் ஒருவருக்கு எழுதிப் பதிவு செய்தால் அது உடனுக்குடன் செயலுக்கு வந்து விடும்.  தான செட்டில்மெண்ட் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.  உயில் எழுதி வைப்பவர் காலமான பிறகுதான் நடைமுறைக்கு வரும்  புதிவு செய்ய வேண்டியதில்லை.  சாட்சிகள் வேண்டும்.

கேள்வி 4.

நான் ஒரு சீட்டுக் கம்பெனியில் ரூ.1,00,000 க்குச் சீட்டுப் போட்டிருந்தேன்.  சீட்டை எடுத்தப்பிறகு சரியாகத் தவணைத் தொகை செலுத்த இயலாமல் போய்விட்டது.  நான் அதே கம்பனியில் வைத்திருந்த என்னுரைய டெபாசிட் தொகையை சீட்டு பாக்கிக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளம்படி கடிதம் கொடுத்துவிட்டு வெளியூருக்கு வேலை நிமித்தமாக சென்று கடந்த மூன்றாண்டுகளாக அங்கு வசித்து வருகிறேன்.  இந்த நிலையில் சீட்டுத் தவணை செலுத்தவில்லை என சீட்டு நடுவர் முன்பு வழக்கு தொடர்ந்து என்னைக் கைது செய்ய சிவில் கோர்ட்டில் உத்தரவு பெற்றிருப்பதாகத் தெரிய வருகிறது.  நான் இப்போது என்ன செய்ய வேண்டும்.

S.R.ராஜதுரை, கோவை 8

பதில் – 4

உங்களுடைய டெப்பாசிட் பணம் சீட்டு நிலுவைத் தொகைக்கு சரியாக இருந்தும் அதனை எடுத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல், உங்கள் மீது சீட்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தால், அது சேவை குறைபாடு என்கிற அடிப்படையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் சீட்டு நிறுவனத்தின் மீது வழக்கத் தொடர்ந்து இழப்பீடு கேட்க இயலும்.   அதே சமயம், சிவில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மேற் சொன்ன காரணங்களுக்காக இரத்து செய்யக் கோரி ஒரு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

கேள்வி – 5

இந்து பொது குடும்பத்தைச் சேர்ந்த மைனரின் சொத்தை அவனது கார்டியன் தாயார் (தகப்பன் இல்லை) வில்லங்கங்கள் செய்தால் அவை செல்லுமா?

முகுந்தன், வால்பாறை

பதில் – 5

மைனர் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவம் மைனரின் சொத்தைப் பாதுகாத்து மேற்பார்வை செய்து வரும் கார்டியன் வில்லங்கப்படுத்தினால், அதை செல்லாது என கூற இயலாது.  பின்னால் வீண் பிரச்சினைகள் வராமல் தவிர்க்க முன் கவனமாகவும் இருக்கவும் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மைனரின் சொத்தை வில்லங்கம் செய்வது அவரது நலனுக்காக என அனுமதி பெற்று வில்லங்கம் செய்தால் அது செல்லுபடி ஆகும்.  யாரும் கேள்வி கேட்க இயலாது.  மைனரே கூட அவர் மேஜரானவுடன் நீதிமன்ற அனுமதி பெற்று செய்யப்பட்ட வில்லங்கத்தை கேள்வி கேட்க இயலாது.

geb1970zகேள்வி – 6.

நானும் என் பக்கத்து வீட்டுப் பெண்ணும் சிறுவயது முதலே உயிருக்கு உயிராகக் காதலித்துவருகிறோம்.  இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் எங்கள் விருப்பத்திற்கு மாறாக
வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்துள்ளார்கள்.  இது விசயமாக ஊர் பஞ்சாயத்திடம்முறையிட்டோம்.  அதற்கு அவர்கள் ரூ.25,000/- கொடுத்தால் எங்கள் திருமணம் நடக்கும்என்கிறார்கள்.  பதிவுத் திருமணம் செய்து கொண்டாலும் அந்தப் பணம் கொடுக்க வேண்டுமாம்அந்த அளவிற்கு என்னிடம் பணம் இல்லை.  இச்சூழலில் நாங்கள் சாகத் துணிந்து விட்டோம்.
தங்களுடைய அறிவுரை தேவை.

பதில் – 6.

“நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்குமாம்”.  நீங்கள் நரியை அணுக வேண்டியதில்லை. நல்ல மனம் படைத்தவர்களை அணுகி அவர்கள் மூலம்
திருமணம் செய்து கொள்ளுங்கள்.  ஓருயிர் ஈருடலான தாங்கள் எதையும் தாங்கிக் கொள்ளலாமே!எதற்கு மரணத்தைத் தழுவ வேண்டும்? மணம் புரிந்து மகிழ்ச்சியோடு வாழுங்கள்.  “ வாழ்க்கை
வாழ்வதற்கே” என்பதை மனதில் வையுங்கள்.

கேள்வி – 7

நான் அரசு ஊழியனாக இருந்து ஒய்வு பெற்றவன்.  ஓய்வு பெற்ற பின் என் மனைவி இறந்துவிட்டாள்.  நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.   எனக்குப் பிறகு என்மனைவிக்குக் குடும்ப ஓய்வு ஊதியம் கிடைக்குமா? என்பதைத் தெரிவியுங்கள்.

பதில் –7

உங்கள் இரண்டாவது மனைவியின் புகைப்படத்தையும் அவரது பெயரையும் இப்போதே நீங்கள்பணிபுரிந்த அரசுத் துறைக்குத் தகுந்த ஆதாரங்களுடன் அனுப்பி உங்கள் இரண்டாவது மனைவியின் பெயரை  உங்கள் முதல் மனைவிக்குப் பதிலாகப் பதிவு செய்து கொள்ளலாம்.  அவ்வாறு உங்கள் முதல் மனைவியின் பெயருக்குப் பதிலாகப் பதிவு செய்து கொண்டால், உங்கள் இரண்டாவது மனைவிக்கு உங்களுக்குப் பிறகு குடும்ப
ஓய்வூதியச் சட்டம், ஓய்வு பெற்றவரின் மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் கொடுக்க வேண்டுமென்றுகூறுகிறது.  இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஒய்வூதியம் இல்லையயன்று சட்டம் கூறவில்லை.

கேள்வி – 8.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீஸார் விலங்கு மாட்டி நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லலாமா?

பதில் – 8

குற்றம் சாட்டப்பட்ட யாரையும் விலங்கிட்டு அழைத்துச் செல்ல காவல் துறையினருக்குஉரிமையில்லை.  அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் அவர்களை அவ்வாறு செய்ய
அனுமதிப்பதில்லை.  விலங்கிட்டு ஒருவரை அழைத்துச் செல்வது மனித உரிமையும், இந்தியஅரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளுள் அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிப்பதில்லை
விலங்கிட்டு ஒருவரை அழைத்துச் செல்வது மனித உரிமையையும், இந்திய அரசமைப்புச் சட்டஅடிப்படை உரிமைகளை மீறுவது ஆகும்.  காவல் துறை நிலை ஆணை (police standing orders) 666 ஐ மீறுவதாகும்.  பத்தாண்டுகளுக்கு முன்பே இந்திய உச்ச
நீதிமன்றம் காவல் துறையினர் யாரையும் விலங்கிட்டு அழைத்துச் செல்லக் கூடாதெனதெளிவு படுத்தியுள்ளது.  இதைப் பற்றியயல்லாம் காவல் துறையினருக்கும் புரிவதில்லை.
குற்றவியல் நீதிபதிகளுக்குக் கூட இதைக் கண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை.காவல் துறையினர் ஒருவரை விலங்கிட்டு அழைத்துச் செல்வாரானால், அதற்காக அவர்கள் மீது
வழக்குத் தொடரலாம்.  குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாதி என்றும் அவரை விலங்கிடாமல் அழைத்துச் செல்ல முடியாது என்றும் நீதிமன்றம் நம்புகிற வகையில் காவல்த் துறையினர்
மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.

கேள்வி –9

நான் முதலில் ஒரு உயில் எழுதி அதன் மூலம் என்னுடைய வீட்டை கடைசி மகன் பெயரில்எழுதி வைத்தேன்.  அடுத்து வேறு ஒரு உயில் எழுதி ஒரு மகன் மற்றும் ஒரு மகன் பெயரில்
வீட்டை எழுதி வைத்தேன்.  பின்னர் அந்த உயிலையும் ரத்து செய்து விட்டு மூன்று மகன்கள்பெயரில் எழுதினேன்.  கடைசியாக எழுதிய உயில் பதிவு செய்யவில்லை.  பதிவு செய்யப்படாதஉயில் செல்லுமா?

பதில் – 9

நீங்கள் கேட்பதைப் பார்த்தால் உங்களுக்கு உயில் எழுதுவதுதான் வேலையாக இருக்கிறதுபோலும்.  உயில் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.  எழுதியதைக் கிழித்தும்
போடலாம்.  நீங்கள் கடைசியாக எழுதிய உயிலே செல்லும்.  உயில் பதிவு செய்யப்படவேண்டும் என்ற கட்டாயம் சட்டத்தில் இல்லை.  இருந்தாலும் பதிவு செய்து கொண்டால்நல்லது என்பதை அறியவும்.

கேள்வி – 10

அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள்.  ஆட்சி மாறியவுடன்கொள்ளையடித்த சொத்துக்களைப் பறித்துக் கொள்ளச் சட்டம் ஏதாவது உண்டா?

பதில் – 10

நேற்று கொள்ளையடித்தவர்கள் இன்று உத்தமர்களாக வலம் வருகின்றனர்.  இன்றுகொள்ளையடிப்பவர்கள் நாளைக்கு உத்தமர்களாக வலம் வர இருக்கிறார்கள்.  இதுதானே
நாட்டின் இன்றைய நிலை.  தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ்கொள்ளையடித்த சொத்துக்களைப் பறிக்க வழி வகைகள் செய்ய வேண்டும்.  பூனைக்கு யார்மணி கட்டுவது?

கேள்வி  11.
அரசு  ஊழியர் ஒருவருக்குத் தவணைமுறையில் பிரிட்ஜ் வாங்க நான் பிணைக் கையயழுத்துப் போட்டேன்.  ஆனால் சரியாகத் தவணையைக் கட்டாத நிலையில் அவர் எங்கோ மாற்றலாகிப் போய்விட்டார்.  தவணை முறையில் பிரிட்ஜ் கொடுத்த நிறுவனம் என் மீதும் அவர் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளது.  நான் கண்டிப்பாகப் பணம் கட்ட வேண்டுமா?

பதில் 11
பிரிட்ஜ் வாங்க பிணைக் கையழுத்து நீங்கள் போட்டதால் பணம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.  பிரிட்ஜ் வாங்கியவர் எங்குள்ளார் என்பது தெரியாத நிலையில் பிரிட்ஜ் நிறுவனம் நீதிமன்றத்தின் மூலமாக வசூல் செய்து கொள்ளலாம்.  அதன் பின்னர் நீங்கள் பிரிட்ஜ் வாங்கியவர் மீது வழக்குப் போட்டு உரிய தொகை, அதற்குண்டான வட்டி மற்றும் வழக்கிற்கான செலவுத் தொகைகளையும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.

கேள்வி –1 2
ஒரு குழந்தை பிறந்த பின்பு என் மனைவி வேறு ஒருவனைக் காதலித்து அவனுடன் சென்று விட்டாள்.  குழந்தையையும் அழைத்துக் கொண்டுப் போய்விட்டாள்.  எனக்கு விடுதலையும் எழுதிக் கொடுத்துவிட்டாள்.  அதனால் என்றைக்காவது ஒரு நாள் வந்து சொத்தில் பங்கு கேட்க இயலுமா?

பதில் – 12
உங்கள் மனைவி எழுதிக் கொடுத்த விடுதலைப்பத்திரம் கண்டிப்பாகச் செல்லாது.  நீங்கள் முறையாக நீதிமன்றம் மூலமாக விவாகரத்து வாங்கியிருக்க வேண்டும்.  அதனால் நீங்கள் வேறொரு திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வத் தடை இருக்கும்.   விவாகரத்து நடைபெறவில்லையயனில், உங்கள் சொத்தில் பங்கு வேண்டுமென்று உங்களை விட்டுச் சென்ற மனைவி உரிமை கொண்டாடுவாள்.

கேள்வி – 13
கொலை அல்லது தற்கொலை பற்றித் தகவல் கொடுத்தால், தகவல் கொடுத்தவர் சாட்சி சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்களே, சரியா?

பதில் – 13
கண்டிப்பாகச் சாட்சி சொல்லித்தான் ஆக வேண்டும்.  அதில் எந்தவிதமான சந்தேகமோ,தவறோ கிடையாது.  வழக்கில் உண்மையான தகவலைத் தான் அறிந்தவாறு சொல்வது நல்ல குடிமகனின் கடமை என்பதை அறிந்து கொள்ளவும் சாட்சி சொல்லப் பயப்படுவது, தன் கடமையைத் தட்டிக் கழிப்பதற்கு ஒப்பாகும்; குற்றமும் ஆகும் என்பதை மனதில் வையுங்கள்

கேள்வி – 14
திருமணத்திற்குப்பிறகு இரண்டு மாதங்கள்தான் என் கணவர் என்னுடன் வாழ்ந்து வந்தார். பின்னர் என்னைத் துரத்தி விட்டார்.  எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  குழந்தை பிறந்த அன்று வந்து பார்த்துவிட்டுச் சென்றவர்தான், இன்னும் திரும்பவேயில்லை. இப்போதைக்குப் பிள்ளைக்கு வயது பத்தாகிறது.  வேறு திருமணம் செய்து அவர் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.  இந்நிலையில் என் ஆண் குழந்தை அவருக்கு வேண்டுமாம்!  அவர் கேட்பது சரியா? என் பிள்ளையை இழக்க நேரிடுமா?

பதில் – 14
நீதிமன்றம் சென்றால் கூட உங்களிடமிருந்து உங்கள் குழந்தையை உங்களை விட்டு ஓடிப் போன கணவன் பெற முடியாது.  கண்டிப்பாகக் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்க மாட்டார்கள் என்கிற தைரியத்தில் இருங்கள்.

கேள்வி – 15
நகரங்களில் சினிமாA/C  தியேட்டர் என்று விளம்பரப் படுத்தி, அதற்குண்டான கட்டணத்தையும் சேர்த்து ரூ.50/-, ரூ.100/- என்று டிக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர்.  ஆனால் சினிமா தியேட்டரில் A/C  வேலை செய்வதில்லை.  இப்படிப்பட்ட சூழலில் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

பதில் – 15
தியேட்டர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கலாம்.  வசதி செய்து கொடுக்காதது ஏமாற்றுக் குற்றமாகும்.  தொடர்ந்து கொண்டேயிருந்தால், காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் குற்ற வழக்குப் பதிவு செய்வார்கள்.  மேலும் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒரு சிறு தொகை நஷ்ட ஈடாகக் கேட்கலாம்.
Blogger Widgets
P.Senthilkumar, Andimadam.. Powered by Blogger.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. How To Do Anything - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger